கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி-மணப்பாறை சாலை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் தரகம்பட்டி வெங்கடேஸ்வரா நகர் அருகே மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக பெருமளவு தண்ணீர் வீணாகி ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.