வீணாகும் குடிநீர்

Update: 2023-04-23 13:52 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டை சாலை தெட்சிணாமூர்த்தி நகரில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாய் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி செல்கிறது. இந்த நீர் சாலையோரத்தில் தேங்கி சேறும்,சகதியுமாக மாறுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்