பாத்திரம் கழுவும் இடமாக மாறிய தண்ணீ்ர் தொட்டி

Update: 2023-04-19 17:30 GMT

சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பயணிகள், டிரைவர்கள் பயன்பாட்டிற்காக 2 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அதனை சுற்றி ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. ஓட்டலில் சாப்பிடுபவர்கள் அந்த தண்ணீர் தொட்டியில் கைகளை கழுவுகிறார்கள். மேலும் குப்பைகளை அங்கேயே போடுகிறார்கள். மற்றொரு தண்ணீர் தொட்டியின் அருகே பாத்திரங்களை கழுவுகிறார்கள். இதனால் பயணிகள் தண்ணீர் குடிப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே இதனை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்