வீணாகும் தண்ணீர்

Update: 2023-04-12 11:59 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் தார் சாலை அருகில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து அதில் மின் மோட்டார் பொருத்தி மின் இணைப்பு தரப்பட்டது. அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளில் உள்ள அழுக்கு துணிகளை இங்கு கொண்டு வந்து நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் பிடித்து துணிகளை துவைத்து செல்கின்றனர். சிலர் தண்ணீரை திறந்து விட்டு கை, கால்களையும், முகங்களையும் கழுவுவதும், குளிப்பதுமாக உள்ளனர். சில நேரங்களில் தண்ணீரை திறந்து விட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக நீர்த்தேக்க தொட்டி இருக்கும் பகுதி நெடுகிலும் குடிநீர் வீணாகி குழம்போல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்