சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2023-04-09 10:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம்,திருவாலங்காட்டில் அளவத்தடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அலவத்தடி,கண்ணியம்மன் கோவில் தெரு, ரெயிலடிதெரு, தோப்பு தெரு பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் கலங்களாக சுத்தமின்றி குடிநீர் வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைஎடுப்பார்களா?




மேலும் செய்திகள்