குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?

Update: 2023-04-02 15:18 GMT
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ராஜாகாலனி செல்லும் வ.உ.சி சாலையில் கடந்த ஒரு மாதமாக தனியார் குடியிருப்பு முன்பு உள்ள மின்கம்பத்தை சுற்றிலும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த குழாய் சீர் செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்கம்பம் சாய்ந்து அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்