குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

Update: 2023-04-02 14:56 GMT
தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி, மேட்டு காட்டில் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. மேலும், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த தொட்டியில் கீழ் பகுதியில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியே செல்கிறது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் குடிநீரின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்