குடிநீர் வசதி செய்துதரப்படுமா?

Update: 2023-04-02 14:33 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் பகுதி பீட்ச் ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு முறையான குடிநீர் வசதி செய்து தரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கான நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக முதியவர்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்