குடிநீர் குழாய் அடைப்பு சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-29 11:43 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் சாலையில்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. மேலும் தண்ணீர் இருப்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

வசந்த் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்