குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2026-08-09 09:40 GMT

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் உள்ள 265 ஊராட்சிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டியை சுத்தம் செய்த நாள், அடுத்த முறை சுத்தம் செய்ய வேண்டிய நாள் போன்ற விவரங்கள் பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் எழுதப்படுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் பெயரளவிற்கு மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமராஜ், அருள்புரம்.

மேலும் செய்திகள்