குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-29 09:43 GMT

ஆலாந்துறையை அடுத்த ஹஸ்கூல் புதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் மருந்து சீட்டு வாங்கும் இடத்தில் குடிநீர் வழங்கும் எந்திரம் ஒன்று உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக செயல்படாமல் பழுதடைந்து இருக்கிறது. இதனால் அங்கு வருபவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்