குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-22 07:49 GMT


கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சுண்டவிளை பகுதியில் முடவிளை குழிகுளம் என்ற பீக்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் படித்துறைகள், சுற்றுசுவர்கள் சேதமடைந்தும், கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாருவதுடன், படித்துறையையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்