வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-19 14:33 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலூகாவில் ஆக்கூர், உடையார்கோயில்பத்து, பண்டாரவடை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் முறையாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கின்றன. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்



மேலும் செய்திகள்