திருச்சி உறையூர், பாளையம் பஜார் 55-வது வார்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.