குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-03-15 18:22 GMT
விழுப்புரம் நகராட்சி 42-வது வார்டு பாணாம்பட்டு ஆதிதிராவிடர் காலணி டாக்டர் அம்பேத்கர் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதோடு, கழிவுநீர் கலக்கும் அபாயமும் உருவாகி வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்