குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா?

Update: 2023-03-12 14:12 GMT

கரூர் மாவட்டம், கூலக்கவுண்டனூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தண்ணீரை அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குடிநீர் தொட்டியில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிலர் அந்த தொட்டி தெரியாத வகையில் விளம்பர பதாகைகளை ஓட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்