மண்ணில் புதைந்த ஆழ்துளை கிணறு

Update: 2023-03-08 17:57 GMT

தா்மபுரி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பழுதடைந்தது. அதனை நீண்ட நாட்களாக சரி செய்யாமல் விட்டதால் தற்போது மண்ணோடு மண்ணாக புதையுண்டு கிடக்கிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணற்றை சீரமைத்து தர வேண்டும்.

-சாமி, ஏரியூர்.

மேலும் செய்திகள்