பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் திட்ட பகுதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அன்றாடத் தேவைகளுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உரிய நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காமலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.