அரசு கல்லூரியில் குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-08 17:56 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி வளாகத்தில்குடிநீர் வசதி, வகுப்பறைகள், கழிவறைகள் போதிய அளவில் இல்லை. புளோரைடு கலந்த உப்பு தண்ணீரை தான் மாணவர்கள் குடித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் ஒகேனக்கல் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்காக பரிதவிக்கும்அவல நிலை உள்ளது. எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திவ்யபாரதி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்