வீணாகும் குடிநீர்

Update: 2023-03-08 08:43 GMT

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலத்துக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் ராஜாக்கமங்கலம் துறை செல்லும் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக சாலை பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது. மேலும், சாலையில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுப்பதுடன், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்