குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-05 09:02 GMT

பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் போதிய குடிநீர் வசதி இல்லை. இதன் காரணமாக குடிநீருக்காக அவர்கள் நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. மேலும் சுகாதாரமற்ற நீரை பருகி வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த பகுதியில் சுகாதாரமான குடிநீரை வழங்கி, தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்