குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2023-03-01 12:04 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மேய்க்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்து நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் கலங்கலாக வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு உடல் உபாதை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்