குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-22 09:07 GMT

பந்தலூர் அருகே பந்தபிளா முருகன் கோவில் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரிவர குடிநீர் கிடைப்பது இல்லை. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. மேலும் சுகாதாரமற்ற நீரை பருகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்