குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2023-02-19 11:48 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் புளியஞ்சோலை சுற்றுலா மையத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும், அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் வாசிகளின் குடிநீர் தேவைக்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதையடுத்து இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்