குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-19 09:23 GMT

கூடலூர் கோத்தர் வயல் உள்பட பல பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் குளறுபடிகள் நடைபெறுகிறது. இதனால் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்வதால் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோக பணியாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இனிவரும் காலங்களில் குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்