குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-02-12 18:24 GMT
விழுப்புரம் நகராட்சி 22-வது வார்டு அண்ணாநகரில் மினிகுடிநீர் தொட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பழுதானதால், தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்