கலங்கலான குடிநீர்

Update: 2023-02-12 12:31 GMT

திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்கு உட்பட்ட துறையூர் ரோடு பைபாஸ் கார்னர் முதல் திருமுருகன் நகர் ஒன்று முதல் மூன்று தெருக்கள் வரையும், நடராஜ நகர், நிலா நகர் போன்ற தெருக்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முசிறி நகராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது. வழங்கப்படும் குடிநீர் தற்போது கலங்களாகவும், அசுத்தமாகவும் வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்