குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-02-12 05:16 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் மயிலாடுதுறை - சிதம்பரம் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும், உடைப்பின் காரணமாக குழாய்களில் குடிநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்