குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2023-01-29 17:12 GMT

சேலம் ஆண்டிபட்டி ஊராட்சியில் பெரியாண்டிச்சி கோவில் அருகே அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாய் அமைத்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணிகன்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்