ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-01-11 13:31 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கரூர் பாளையம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் பஸ் நிறுத்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தொட்டியை தாங்கி நிற்கும் 4 தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு தூணின் அடி மட்டத்தில் கான்ங்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்