கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2023-01-08 11:49 GMT
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிட காலனியில் 4 மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பணி தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், கால்நடைகள் இந்த குழியில் விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்