வீணாக வழிந்து ஓடும் குடிநீர்

Update: 2023-01-08 09:30 GMT

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சின்ன பள்ளிவாசல் தெருவுக்கு திரும்பும் இடத்தில் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக சாலைகளில் குடிநீர் வழிந்து ஓடுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குடிநீரால் சேறும், சகதியுமாக சாலைகள் மாறி வருகிறது. எனவே குழாயை உடனடியாக சீரமைத்து குடிநீர் வீணாகாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்