குடிநீர் தேவை

Update: 2022-12-21 16:29 GMT

சேலம் யூனியன் ஆண்டிபட்டி பஞ்சாயத்தில் லட்சுமி நகர் மற்றும் பனங்காடு ஆயாநகர் பகுதிகளில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் குழாய்கள் அமைத்து 2 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தி, பனங்காடு, சேலம்

மேலும் செய்திகள்