சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-12-18 17:45 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரிய ஏரி ஊராட்சி பிள்ளையார் கோவில் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த குடிநீர் தொட்டியின் 4 தூண்களும் சேதமடைந்து உள்ளது. இதேபோல் தொட்டியின் மேல் பகுதியிலும், அடிப்பகுதியிலும் கான்கிரீட் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. குடிநீர் தொட்டிக்கு அருகில் உள்ள குழாய்களில் பொதுமக்கள் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி சிறுவர்கள் அந்த குடிநீர் தொட்டிக்கு கீழ் விளையாடி வருகின்றனர். எனவே உடைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிராசத், தலைவாசல், சேலம்.

மேலும் செய்திகள்