பள்ளி முன் சேதமடைந்துள்ள தொட்டி

Update: 2022-12-18 12:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொட்டி மூடி சேதமடைந்துள்ளது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் அதன் மேல் ஏறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்