வடிகால் வசதி வேண்டும்,

Update: 2022-12-14 15:39 GMT


தஞ்சாவூர் மாவட்டம், பழவத்தான் கட்டளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவேகானந்தா நகரின் மூன்றாவது குறுக்குத்தெருவில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இந்த இடத்தில் மழைநீர் வடிய வழியே இல்லாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்யாணசுந்தரம்,பழவத்தான்கட்டளை

மேலும் செய்திகள்