வீணாகும் குடிநீர்

Update: 2022-12-07 14:03 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அந்தோணியார் கோவில் தெருவிலிருந்து நாடிமுத்து நகர் திரும்பும் சாலை சந்திப்பில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. தற்போது மழையும் பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை,

மேலும் செய்திகள்