குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-12-04 11:55 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிந்தலவாடி ஊராட்சி, நந்தன் கோட்டை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்யுமாறு பலமுறை நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் புதிதாக அமைந்த தார்ச்சாலையை உடைத்து வெளியேறும் தண்ணீரை கழிவுநீர் வாய்க்காலில் விட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வுகான வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்