குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-11-30 15:26 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சியாமுத்துபட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்ததால் கடந்த சிலநாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தள்ளுவண்டியில் பலகிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்துவருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி நீர்தேக்க தொட்டியை சீரமைத்து நீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

மேலும் செய்திகள்