குடிநீர் வசதி வேண்டும்...

Update: 2022-11-30 14:51 GMT


தஞ்சை கீழவாசல் 11-வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பெண்கள் காலிக்குடங்களுடன் சுமார் 1 கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.மேலும் அந்த பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றது.இந்த நாய்கள் தண்ணீர் பிடித்து செல்லும் பொதுமக்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி குடிநீர் கிடைக்கவும், தெரு நாய்களை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழவாசல்

மேலும் செய்திகள்