சுரங்கப்பாதையில் விபத்து

Update: 2022-11-23 17:23 GMT

சேலம் மேற்கு வட்டம் சித்தர் கோவில் இளம்பிள்ளை பிரதான சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்தநிலையில் அந்த சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளன. இந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சிலர் அந்த குழியால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இந்த குழிகளை சரி செய்யவும், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேசிங்குராஜா, இளம்பிள்ளை, சேலம்.

மேலும் செய்திகள்