புகார் பெட்டி செய்தி எதிரொலியால், சுத்தமான குடிநீர் வழங்கபடுகிறது

Update: 2022-11-23 13:52 GMT

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிசேகக்கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் நிறம் மாறி கலங்கலாக வந்தது. இதனால் தண்ணீரை குடிக்க முடியாமல் இருந்தது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு நல்ல சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்