தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை சூழ்ந்த குப்பைகள்

Update: 2022-11-16 12:50 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே குமாரகிரி பஞ்சாயத்து ராஜீவ்நகரில் ஆழ்குழாய் கிணறுடன் மின்மோட்டார் அறையும், சத்திரம் பஜாரில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை சூழ்ந்து குப்பைகூளங்களாக காட்சி அளிக்கிறது. எனவே, காட்சிப்பொருளான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்