சுத்தமான குடிநீர் கிடைக்குமா?

Update: 2022-11-16 11:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிசேகக்கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் நிறம் மாறி கலங்கலாக வருகிறது. இதனால் தண்ணீரை குடிக்க முடியவில்லை. மேலும் கலங்கிய நீரை குடிப்பதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்