மழைநீர் வடிகால் தூர்வார வேண்டும்

Update: 2022-11-09 10:35 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் கிராமத்தில் திருநகரி கடைவீதியில் இருந்து, திருநகரி சாலை வரை சாலையோரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வாய்க்கால் தூர்ந்து போய் தண்ணீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வாய்காலை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்