ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சிலநாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. நல்ல தண்ணீர் கிடைக்காமல் சிலர் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.