வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-10-23 10:35 GMT

மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் பூசை நகர் உள்ளது. அந்த நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்