குடிநீர் குழாய்கள் பராமரிக்கப்படுமா?

Update: 2022-10-19 14:25 GMT

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, நெகமம் பகுதிகளில் பிரதான குடிநீர் குழாய்கள் சில இடங்களில் பழுதடைந்து உள்ளன. விரைவில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால் மழைநீர் குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த குழாய்களை கண்டறிந்து, அதனை உடனடியாக பராமரிக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்