குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-10-19 11:49 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் ரெயில்வே கேட் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தார் சாலை ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. மின்மோட்டார் மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின்மோட்டாரை எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த மின்மோட்டார் மீண்டும் பொருத்தப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்