குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-10-14 15:07 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு முறையும் மீனாட்சிபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் போது நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர். இசக்கிமுத்து, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்